முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர் – மு.இராகவையங்கார்

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்   பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார். – மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399

இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும் அளவையின் விளைவும் தெளிவுற விரித்து சுவைபெற உரைத்த நவையில் புலமையும் மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் சீரிதின் இயைந்த கீரன் -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள் – மு.வை.அரவிந்தன்

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்   இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்­காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும்…

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்:

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்: தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை (எழுத்துகளால்) குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’ என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். … தெய்வச்சிலையார் உரை நடை உயிரோட்டமுடைதாய், எளிதாய் உள்ளது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.213-217

உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)

உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளை­யும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை   சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக்…

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் – மு.வை.அரவிந்தன்

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் பிறர்கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன. இளம்பூரணர்த் தமிழ்க்கடலுள் பலகால் மூழ்கிதீ திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ் நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.146

மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நேயம் மறந்தாலும் மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே!   தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்….

தெற்றிக் காடுகளும் நாகலிங்க மரங்களும்

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான தெற்றிக் காடுகளும்  காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் நாகலிங்க மரங்களும்   பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள்.   தேனிமாவட்டத்தில் கள்ளிக்காடு, தெற்றிக்காடு, கோயில்காடு, பனங்காடு எனக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் பண்டைய காலத்தில் சிங்கம், புலி, கரடி, பருவிலங்கு (காண்டாமிருகம்) எனப் பல…