வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!   வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட்…

பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுவோம்! – ஔவை துரைசாமி

  இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலை மடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிற நாட்டார் தலை வணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையீறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும்…

அணிற்பிள்ளை – தி.ஈழமலர்

கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!   பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் – பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை.   அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன்…

சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா

  சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே…

முச்சங்கச் செய்திகளும் உண்மையே! – கா.அப்பாத்துரை

  தமிழில் முதல் இடை, கடை, என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி பஃறுளி நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு. ஒரு சாய்பின்றி ஆய்பவர்கட்குச் சங்ககால வாழ்வின் தன்மை மலைமேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச் சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில்…

சங்கத்தில் மிகுதியான பெண்பாற்புலவர்கள் இருந்தனர் – சேலம் செயலட்சுமி

  சங்கத்தில் மிகப்பல பெண்பாற்புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது மிக்க வியப்பிற்குரியது. இவர்கள் பல்வேறு குலத்தொழில் உடையவர்களாகவும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களாகவும் இருப்பது அதனிலும் அதிசயத்திற்குரியது. அக்காலத்தில் தொழிலையொட்டியே சமுதாயம் வகுக்கப்பட்டிருந்தது. என்றும், பிற்காலத்தில் சாதி வேறுபாடுகள் தோன்றின என்றும் தோன்றுகிறது. இயற் புலவர்கள் இசைப்புலவர்கள், நடனப் பெண்கள் ஆகியோர் அரசு குடும்பத்திலும் இருந்தனர். எளிய தொழிலாளிகள் இல்லத்திலும் தோன்றினர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்புக்கொண்டு என்ற சங்க காலப் பெண்புலவர் பாண்டியனின் அரசமாதேவி; ஆதிமந்தி என்பாள் சோழ மன்னனின் திருமகள்; நடனத்தில் வல்லவளாக அவள்…

உலக அமைதியை நிலைநாட்டத் துணைசெய்வன சங்க இலக்கியங்களே!

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள் சங்கமாகக் கூடித் தமிழைப் போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொலை நூல்களைக் கொண்டது. இவை, படிப்போர் உள்ளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் பொருள்வகையானும் திணை வகையானும் பாவகையானும் அடி வகையானும் பகுத்துத் தொகுத்தனர் நம் முன்னர்.  இவற்றை இயற்றிய புலவர்களின் பெயர் தெரிந்தவர் நானூற்று எழுபத்து மூவர். பெயர் தெரியாதவர்களும் சிலர் உளர்….

மின்வழி அருங்காட்சியகம் (Electronic Museum) – மறைமலை இலக்குவனார்

  வலைத்தளத்தின் மூலம் பல செய்திகளை, ஒலியிழைகளை, காணொளியிழைகளைப் பரிமாறிக்கொள்கிறோம். இதன் படிமுறை வளர்ச்சியாக மின்வழி அருங்காட்சியகம் உருவமைக்கப்பட்டுச் செயற்பட்டுவருவது இணையத்தளத்தின் மற்றொரு திருப்புமையமாகும்.   அருங்காட்சியகத்தில் அரிய செய்திகளையும் காட்சிகளையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உருமாதிரிகளையும் பார்வையிடுகிறோம். விளக்கங்களை வழிகாட்டுநரோ அல்லது ஒலிபெருக்கியோ வழங்கும். இதுபோன்றே மின்வழி அருங்காட்சியகத்தில் காட்சிகளையும் ஒலியிழைகளையும் காணொளியிழைகளையும் சேமித்துத் தொகுத்து முறைமைப்படுத்தித் திட்டமிட்டு ஒரு நிகர்நிலைக் காட்சிக்கூடம் அமைக்கலாம் என்னும் கோட்பாடே மின்வழி அருங்காட்சியகத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. வரலாற்று நிகழ்ச்சிகளை, நம் கடந்தகாலத்தில் ஏற்பட்ட திருப்புமையங்களை இத்தகைய வகையில்…

தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்

  தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.   ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார்.   தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது….

நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!  …

தமிழையே பேசுக! தமிழையே சிந்திக்க!- மாகறல் கார்த்திகேயர்

தமிழை முன்னே நீ கற்க; நின் மகனுக்குக் கற்பிக்க; எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க; கற்பிக்க; கேட்க; கேட்பிக்க; இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசற்க; புகழ் நிமித்த மாகவும் பொருள் நிமித்த மாகவும் ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது; எப்போதும் தமிழையே தெய்வம் போலவும் நற்றாய் போலவும் சிந்திக்க; நீ தமிழ் மயம் ஆனால் நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்; நின்குடியும் தமிழ் மயமாகும். நின் கை தமிழ்நூல் எழுதுக நின் வாய் தமிழையே பேசுக நின் மனம் தமிழையே சிந்திக்க நோய் கொண்டு மெலியனாயின் மருந்துண்டு…

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்

திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். நீங்கள் என்ன சமயத்தார்…