கவிதை உறவு -சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல்

  கவிதைஉறவு ஆண்டு விழாவில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல் இது. கவிதைஉறவு ஆண்டு விழாவில் பரிசுகள் பெறப்போகும் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.   இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…

தமிழர்கள் எழுவரையும் காப்புவிடுப்பில்(parole)விடுவிக்கப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து  விடுத்துள்ள அறிக்கை!   இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.   கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு…

வெட்டிப் பதிவர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2016

வெட்டிப் பதிவர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2016 வணக்கம் வலைப்பதிவர்களே!   ‘வெட்டிப் பதிவர் முகநூல் குழுமம்’ வலைப்பதிவர்களுக்கென்று கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்குச் சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையைக் குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்குப் பறைசாற்ற இஃது அருமையான ஒரு வாய்ப்பு. உங்கள்…

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்   சென்னையில்  சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016  காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன்  முதலான பலர் கைதாயினர்.

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…

படிப்பதால் மட்டுமே விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்! – கவிஞர் மு.முருகேசு

புத்தகம் படிப்பதால் மட்டுமே குமுகாய விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்!     – உலகப் புத்தக நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு   வந்தவாசி.ஏப்.17. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால்மட்டுமே  குமுகாய(சமூக) விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.      இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.  ஊர்…

சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்

அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்   புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….

கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை

கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை    தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர்  கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார்.   விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார்  இரமேசு சிறப்புரையில், “சிறு…

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி  ஏற்றது.   ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக  உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:  சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)  கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…