வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

ஆடி 12, 2046 / சூலை 28, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்   சமூக வலைத்தளங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்ப் பேராய விருதுகள் 2015

சிறந்த தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராய விருதுகள் நான்காவது ஆண்டாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதை ‘ஒரு சிறு இசை’ நூலுக்காக வண்ணதாசன் பெறுகிறார். பாரதியார் கவிதை விருது கவிஞர் இன்குலாபுக்குக் ‘காந்தள் நாட்கள்’ நூலுக்காக வழங்கப்படுகிறது. ‘சோஃபியின் உலகம்’ நூலுக்காக ஆர்.சிவக்குமார், சி.யூ.போப்பு மொழிப்பெயர்ப்பு விருதைப் பெறுகிறார். ‘நெட்வொர்க் தொழில்நுட்பம்’ நூலுக்காக பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மு.சிவலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது ‘ஓவியம் –…

தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி மின்தடை

  தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர்   தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அவ்வப்பொழுது இயக்கப்படும் மின்கருவிகள்,  உழவர்களின் மின்னியந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்பொழுது அதிக மின்அழுத்தத்துடன் வருகிறது. இதனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், தண்கலன், மின்…

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு – வி.உருத்திரகுமாரன்

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? தலைமையாளர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !    உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.   குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 இலட்சம் கையெழுத்துகள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தலைமையாளர், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான…

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00  உரூ.   கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:  ஆவணி 03, 2046 – 20.8.2015 முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009          தொ:0413-2247072;  பேசி 9791629979 நெறிமுறைகள்: அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும். கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா தேர்தெடுக்கப்பட்டகதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும். நடுவர் தீர்ப்பே இறுதியானது . சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும் பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 உரூ. இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 உரூ. இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500 உரூ.   க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ்இயக்கம்

மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் – வைகோ

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் “தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி…

ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்!

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக ஆகத்து 3 முதல் 7 வரை தொடர் மறியல் போராட்டம்! சென்னை தலைமைச் செயலகம் – திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு     தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார்.   காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்…

காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி

   மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள்…

தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர்.   மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம்  தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை

சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கான பரிசுப் போட்டி

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான 10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம். நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம். கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும். போட்டியில், முதல் பரிசாக உரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக உரூ.1000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும்…