தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா   தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் சார்பில் 18 நாட்கள் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி தங்கராசு உணவளிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாநில இணைச்செயலாளர் கணேசன், கோட்டப்பொறுப்பாளர் உதயகுமார், மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி முதலான பலர் கலந்து…

கொசுக்கடிக்குத் தீர்வு புகைமூட்டம்

கொசுக்கடிக்குப் பயந்து பழமைக்கு மாறிவரும் தேனிமாவட்ட மக்கள்   தேனிமாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொசுக்கடியிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மூட்டம் என்ற பெயரில் கொசுக்களை விரட்டியடிக்கும் முறையைக் கையாண்டனர்.   பழமையான மண்சட்டி, நொச்சி இலை, வேப்பிலை, தேங்காய் மட்டை, சிரட்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தீயினால் உருவாக்கப்பட்ட கங்குகளை வைத்து புகைமூட்டம் போடுவார்கள். இவ்வாறு புகை மூட்டம் போடப்பட்டு அதனைக் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தொழுவத்தில் வைப்பார்கள். இதனால் கால்நடைகள் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றப்படும்.   அதன்பின்னர் புதுமையாகி, கொசுவர்த்திச் சுருள், கொசுவை…

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை நிலையான தீர்வுகாண சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வழியாகக் கொடைக்கானல் சென்றடையலாம். இச்சாலைகள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.   மலைப்பாதையிலிருந்து கொடைக்கானல், பூம்பாறை, பூலத்தூர் முதலான மலை யூர்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 50 முன்னர்களுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் பெரியகுளம் வழியாகவும், தேவதானப்பட்டி வழியாகவும் குதிரைகள் மூலம் சென்று வந்தனர். தற்பொழுது வாகனப் பெருக்கம் மற்றும் சாலை வசதிகளினால் குதிரைகளை விட்டு விட்டுப் பேருந்துகளிலும்,…

பெண் காவலர்களால் பாதை மாறும் திருமண உறவுகள

தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்கள் பணத்தால் பிரியும் பல குடும்பங்கள் மஞ்சள் குளிக்கும் பெண் காவலர்கள். திருமணங்கள் மேலுலகில் உறுதி செய்யப்படுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை.   திருமணம் நடைபெற்றவுடன் புரிதலுணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ்பவர்கள் வாழ்க்கை என்றும் இனிக்கும். சிலருக்கு ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் 90 நாள்மட்டும் இல்லற வாழ்க்கை இனிக்கும். அதன்பின்னர்தான் கணவன் மனைவியரின் உண்மை உருவம் தெரியவரும். இதற்கிடையில் கணவனின் தாய், தங்கை, அக்கா ஆகியோர்களின் தன்முதன்மைச் செயல்களால் குடும்பத்தில் புயல் வீசத்தொடங்கும்; கணவன், மனைவியரிடையே பிணக்கு…

குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள் – வைகை அனிசு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைக்காணோம் என முறையீடு கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.   வடிவேல் ஒரு திரைப்படத்தில் குளத்தைக்காணோம் என்ற முறையீட்டை அளித்துக் காவலர்கள் வந்து குளத்தைத்தேடித் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். அது போலத் தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி மக்கள் குளத்தைக்காணோம் என முதல்வர் பிரிவிற்கும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளனர்.   அந்த ஊர் பொதுமக்களிடம் பேசியபோது கடந்த மார்கழி 27, திருவள்ளுவர் ஆண்டு 1948 / 10.01.1917இல் தெற்குப் பொய்கை…

தேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை

தேனிமாவட்டத்தில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை   தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப்…

தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு   தேனி மாவட்டத்தில்; கடந்த சில வாரங்களாக அதிகமான அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கடந்த சில வாரங்களாகக் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அதிகாலை வரை வாகனங்கள் இருள்சூழ்ந்தபடியே விளக்குகள் எரித்தும், மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பனி விளக்கு (mist light) பயன்படுத்தியும் வாகனத்தை இயக்குகின்றனர்.   மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குக் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவால் பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற…

அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி – வைகை அனிசு

சுருளியாறு அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி   தேனி மாவட்டத்தில் அருவிகளும், அணைகளும் மிகுந்த மாவட்டமாகும். தேனி மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி முதலான ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் மேற்குமலைத்தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் சுருளி அருவி பலவித மூலிகைகளுடன் கலந்து வருகிறது. மேலும் மூலிகைகள் கலந்து வரும் நீரில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.   சுருளி அருவியில் சுற்றுலாப்…

புகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை   தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு…

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்   பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு.   மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….

மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.   மேலும் இப்பகுதியில் விளையும்,…