புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர். இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது. கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர். தரவு : முதுவை இதாயத்து

வைகை அணையில் தண்ணீர் திருடும் கும்பல்

(வைகை அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கிணறு)     பொதுப்பணித்துறையினர் உடந்தையுடன் வைகை அணையில் தண்ணீர் திருடும் மருமக்கும்பல்   வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுப்பதால் வைகை அணையில் நீர்மட்டம் மளமளவெனச் சரியத் தொடங்குகிறது.   முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைஅணையின் கரையில் பெரிய தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அணையின் கரையை ஒட்டி நிலங்களை வாங்கி அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்துகிறோம் என்று பெயரளவில் வாங்கிச் சீமை இலுப்பை (sapota / sapodilla), எலுமிச்சை போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.   இவ்வாறு அமைக்கப்படும்…

பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் தேனி மாவட்டம்

  தேவதானப்பட்டி பகுதி சிறுவேடந்தாங்கலாக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காட்சியளிக்கும். காரணம் இப்பகுதியில் வைகை ஆறு, மஞ்சள் ஆறு, சோத்துப்பாறை ஆறு, கும்பக்கரை அருவி, எலிவால் அருவி எனப் பல அருவிகளும் மத்துவார்குளம் கண்மாய், வீரன் கண்மாய், குள்ளப்புரம் கண்மாய், செங்குளத்துப்பட்டி கண்மாய், சில்வார்பட்டி கண்மாய் என ஏராளமான கண்மாய்களும் குளங்களும் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் மழை பொழிந்தால் நீர் நிறைந்து காணப்படும். இதனால் கொக்கு, காடை, நாரை, கூழக்கிடாய், வெளிநாட்டுப்பறவைகள் முதலியன இனப்பெருக்கத்திற்குக் கண்டம் விட்டு கண்டம்…

கொடைக்கானல் செல்லும் சாலை மூடப்பட்டதால் வெறிச்சோடிய உணவகங்கள்

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை அருகே ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.    இப்பகுதியில் இதுவரை 110க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கொடைக்கானல் செல்லும் பாதையை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்பவர்கள் தாண்டிக்குடி, பழனி வழியாகக் கொடைக்கானல் சென்றனர். இப்போது இருசக்கர, சிறிய வகை ஊர்திகள் மட்டுமே பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.    இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிவதால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்…

மருந்துகளைத் தெளித்து மீன்களைப் பிடிக்கும் மருமக் கும்பல்-நோய்கள் பரவும் பேரிடர்

  தேனிப் பகுதியில் மருந்துகள் தெளித்து மயக்கமடையச் செய்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உடலுக்குக் கேடு விளையும் கண்டம் உள்ளது.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி பகுதிகளில் ஆறுகளில் உள்ள பாறைகள், பாறைகளின் இடுக்குகள், ஆறு, கண்மாய், ஓடைகளில் உள்ள சந்து பொந்துகளில் குரவை மீன்களும் வேறு சில வகை மீன்களும் வாழுகின்றன. இவ்வகை மீன்களை வலைவீசியோ தூண்டில் போட்டோ பிடிக்க முடியாது. இவ்வகை மீன்கள் விலையும் அதிகம்.  இதனால் இவ்வகை மீன்கள் வாழும் இடத்தைக் கண்டறிந்து மீன்கள்…

தேனிப் பகுதியில் தொடர்மழையால் விலைகுறைந்த மக்காச்சோளம்

    தேனிப்பகுதியில் தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது.     வானம் மாரி நிலம் என்பதே வானாமாரி எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது.  நாளடைவில் மானவாரி நிலங்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது வானத்திலிருந்து விழுகின்ற மழைநீரை மட்டும் நேரடி நீர் ஆதாரமாகக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகின்ற பகுதிகளை மக்கள் வானம் பார்த்த பூமி என அழைக்கின்றனர்.  இவ்வகை மானவாரி நிலங்கள் மேட்டு நிலங்கள், தரைப்பகுதி நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளன. அதாவது  மலைஅடிவாரம், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகள் கரட்டுக்காடுகள் அல்லது…

தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.

தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும். ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால்…

தேனிப் பகுதியில் தீயொழுக்கப் படம் எடுக்கும் மருமக்கும்பல்

தேவதானப்பட்டிப் பகுதியில் அலைபேசி மூலம் தீயொழுக்கப் படம் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.   தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை முதலான அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் திறந்துவிடப்பட்டன.  இப்பகுதியில் வாய்க்கால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் துணிகளைத் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஆறுகள், வாய்க்காலைப் பயன்படுத்தி வருகின்றனர்.   இதனை நோட்டமிடும் மன்மதன்கள் குளிக்கின்ற காட்சிகளைத் தங்கள் அலைபேசிகள் மூலம் ஒளிப்படம் எடுத்தும் காட்சிப்படம் எடுத்தும் இணைய மையங்களுக்கு…

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தண்ணீர் தனியாருக்கு விற்பனை

தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில்…