காரைக்குடியில் வண்ணக் கோலப்போட்டி- சொ. வினைதீர்த்தான்

அண்மையில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் நுண்கலை- பண்பாட்டு மையத்தின் சார்பில் அதன் கல்லூரிகளின் மாணவ மாணவிரிடையே  நாட்டுப்புறப்பாடல்கள், தனிப்பாடல்கள், கோலப்போட்டி முதலானவை   போட்டிக்கான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. பல கோல ஓவியங்களில் எழுதியிருந்ததைக்கொண்டு போட்டிக்கான தலைப்பு “எண்ணங்களின் வண்ணங்கள்’ என அறிந்தேன். கண்டு களித்த வண்ணக் கோலங்கள் சில : – சொ. வினைதீர்த்தான் [கோல மாவில் ஓவியங்கள் வரைவதே வண்ணக் கோலம் என்றாகிவிட்டது. அவ்வாறில்லாமல், புள்ளிகள் மூலம் ஓவியங்கள் அமையும் வண்ணக்கோலம் பெருக வேண்டும். தமிழக நாகரிக, பண்பாட்டு, வரலாற்று…

சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014

தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு  அழைப்பு     தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும்.   இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை?  சிறுவர்க்கு…

அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு

     ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன். சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை…

இலக்குவனார் விழா

  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.   மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.   ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி….

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உரோம்:         இத்தாலியில் கடந்த 2008–  ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி  திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள்  தளையிடப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில்  இத்தாலி  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,…

தலைவர் நேசமணி மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

தமிழர்களின் குமுகாய, பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியைத்  தாய்த்தமிழகத்துடன்  நிலைத்து வைத்துக் கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி  ஈகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர்  தலைவர்(மார்சல்) நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இப்பெருந்தகையாளரின் நினைவைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 48இலட்சத்து 70 ஆயிரம் உரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைவர் நேசமணி மணிமண்டபத்தினை, முதலமைச்சர் செல்வி செயலலிதா காணொலிக் காட்சி மூலமாக  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்து வைத்தார். நாகர்கோவில்…

கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில்  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு  ஓவியக்காட்சியைத்…

கொலையாளியை அடையாளம் காட்டிய கிளி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேசுவர் பகுதியில் வசிப்பவர் விசய்(சர்மா). உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23- அன்று விசய்  திருமண விழா ஒன்றிற்குச் சென்று விட்டார்.  திரும்பி வந்து பார்த்த பொழுது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம்(சர்மா)(45) மருமமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை அறிந்தார். கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லாமல்  தந்திரமாக நடந்து கொண்டுள்ளான். இதனால்,  தொடர்புடைய சத்தா காவல்நிலையத்தினர்  துப்பு துலக் கமுடியாமல், திணறி வந்தனர். இந்நிலையில் நீலம்(சர்மா) வளர்த்து வந்த கிளி கொலையாளியைக்…

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு  அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம்  முதலியவற்றைப் படைத்து அரங்கத்தில் இருந்த  ஏறத்தாழ  400 பேர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். குறிப்பாகச் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலுக்கு ஆடிய  சிறார்கள் அனைவரும் மிகவும்  சிறப்பாக…

புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  புது இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா லிட்டில்டன், மச்சசுசீத்சுசில் பிப்ரவரி 09 ஆம் நாள் இனிதே கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடகம் என சின்னஞ்சிறார் மட்டும் அன்றிப் பெரியவரும் பங்குபெற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிசுபாரதி மாணவர்கள் மூலம்,’கல்வியின் சிறப்பை’ எடுத்துரைக்கும் வகையில் நாடகத்தை இயற்கையாகவும் நகைச்சுவையுடனும் நையாண்டி பாடல்களோடு எழுதி வடிவமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். இனியா,  (இ)லையா, அசுமிதா,அட்சயா, கேசவு, சூரியா, சனனி,அமியா, வர்சிணி, சிந்து,அரிணி,அம்சா, சஞ்சனா ஆகியோர் பங்கேற்று, திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஆகியோரின் கல்வி தொடர்பான கருத்துகளை மேற்கோளாக எடுத்துரைத்துச்…

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா

  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி  முதல் நாளன்று  மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  1100-க்கும்  மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். “தமிழன் என்று சொல்லடா,…