அருட்பா திருக்குறட்பா
பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998. குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா,…
வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்
இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம். இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு….
வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) பொருளும் இன்பமும் 2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப் பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால் சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும் ஒழிபியலில் விளக்க முயல்கிறார். ‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார். அரச அமைப்பும் சிறப்பும் 3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத் துணைக்காரணமாயமையும் அரசியல்…
வள்ளுவரும் அரசியலும் 5 – முனைவர் பா.நடராசன்
(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 06, 2014 இதழின் தொடர்ச்சி) தெரிந்து வினையாடல் தன் மாட்டு அன்பும் அறிவும் தனக்கென அவாவின்மையும், செய்ய வேண்டும் வினையில் துணிவுமுடையாரைத் தெரிந்து செயலில் ஈடுபடுத்த வேண்டும். அந்த வினைக்குந் தகுந்தவனை எவன் என்று கண்டு அவன் மாட்டு வினையின் ஒப்படைத்துவிட வேண்டும். சுற்றம் தழுவல் தனக்கு அதிகாரம் வந்துவிட்டதென்று இறுமாப்படைந்து, பழமையை மறத்தலாகாது. பழைய நண்பர்களைச் சுற்றமாகத் தழுவுதல் வேண்டும். பொதுநோக்கால் பயனில்லை. வரிசையால் அவரவர்க்கேற்ற முறையில் ஆதரவு தருதல் வேண்டும்….
திருக்குறளில் உருவகம் 6 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது. இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும் பார்தாக்கப்பக்கு விடும். ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க…
திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி
(பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298) வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…
குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்
குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…
திருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)
ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்
வெண்பா வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான் நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக் கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில் நிலைத்தானை என்றும் நினை. (நன்மொழி நானூறு 4) தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான் மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான் அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை மறவா மனேம மனம். (நன்மொழி நானூறு 5) “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு” திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில் இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று,…
வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல்…
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா? கயவரை எண்ணிய…
வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்: வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன்…