திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை
(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை மற்றவன் மனைவியை, மனத்தால்கூட, முற்றும் விரும்பாத ஆளுமை. பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து), அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனது மனைவியை விரும்பும் அறியாமை, அறத்தாரிடம் இல்லை. அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். பிறனது இல்லாளை விரும்புவோன், அறத்தை மறந்த அறிவிலாதோன்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை
(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால். 02.இல்லற இயல் அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம், உயிரினும், ஓம்பப் படும் சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை, உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க. பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித் தேரினும், அஃதே துணை. எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை. ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம், …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை
(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 013. அடக்கம் உடைமை ஐந்து புலன்களையும் அடக்கி, முந்து நல்வழியில் நடத்தல். அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை, ஆர்இருள் உய்த்து விடும். அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்; அடங்காமை, இருளுக்குள் செலுத்தும். காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம், அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு. உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை, உயரிய பொருளாய்க் காக்க….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை
(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 012. நடுவு நிலைமை யாருடைய பக்கமும் சாயாமல், நேர்மையாக நடக்கும் சமநிலை. தகுதி எனஒன்று நன்றே, பகுதியால், பால்பட்[டு] ஒழுகப் பெறின். அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப நடக்கும் தகுதியே நடுநிலைமை. செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி, எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து. நடுநிலையார் வளநலம் வழிவழி வருவார்க்கும், பாதுகாப்பு…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்
(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 010. இனியவை கூறல் கேட்பவர் மனமும் மகிழும்படி, இனியநல் சொற்களைக் கூறுதல். இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம், செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல். இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல். அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து), இன்சொலன் ஆகப் பெறின். மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து இன்சொல்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்
(அதிகாரம் 008. அன்பு உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல் உறுபசியுடன் வருகின்ற எவருக்கும், விருந்து படைத்தலும் உதவுதலும். இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி, வேள்ஆண்மை செய்தல் பொருட்டு. இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும், நல்உதவி செய்யவுமே ஆகும். விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று. விருந்தாளர் வெளியில்; சாவினை நீக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை
(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 008. அன்பு உடைமை உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர் புன்கண்நீர், பூசல் தரும். அன்பை அடைக்கும் கதவுஇல்லை; அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும். அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார், என்பும் உரியர் பிறர்க்கு. அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார், …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு
(அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 007. மக்கள் பேறு ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த, மக்களைப் பெறுதல் பெரும்பேறு. பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த மக்கள்பே(று), அல்ல பிற. அறி[வு]அறிந்த மக்கள் பேறே, பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு. எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப் பண்(பு)உடை மக்கள் பெறின். பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்
(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 002 இல்லற இயல் அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும். மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள், வாழ்க்கைத் துணை. மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு தகுதியள்; நலம்சார் துணை. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை, எனைமாட்சித்(து) ஆயினும் இல். இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின், மற்ற சிறப்புகளால்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை
(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02 இல்லற இயல் அதிகாரம் 005. இல்வாழ்க்கை குடும்ப வாழ்க்கையின் கடமைகளும், அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும். இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும், நல்ஆற்றின் நின்ற துணை. பெற்றார், மனைவி, மக்களுக்கு, இல்வாழ்வான் நவவழித் துணைவன். துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை. துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு, இல்வாழ்வான்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்
(அதிகாரம் 003. நீத்தார் பெருமை தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் ‘சிந்தனையும், சொல்லும், செயலும் தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல் சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு) ஆக்கம் எவனோ உயிர்க்கு…..? சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட, வளமும் நலமும் வே[று]இல்லை. அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை, மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு. அறத்தைவிட, நல்லதும், அதனை மறத்தலைவிடக், கெட்டதும்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 003. நீத்தார் பெருமை
(002. வான்சிறப்பு தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 01 பாயிர இயல் அதிகாரம் 003. நீத்தார் பெருமை துறவியரது, சான்றோரது ஆற்றல்கள், அறவியல் பண்புகள், பெருமைகள். ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும், பனுவல் துணிவு. ஒழுக்கநெறி நின்று, துறந்தார்தம் பெருமையை நூல்கள் போற்றட்டும். துறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்(து), இறந்தாரை எண்ணிக்கொண்(டு) அற்று. துறந்தார் பெருமையை, உலகில் இறந்தாரை எண்ண இயலாது. இருமை வகைதெரிந்(து), ஈண்(டு)அ)றம் பூண்டார் பெருமை, பிறங்கிற்(று) உலகு. நல்லன,…
