ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்
(முன் பகுதியின் தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல் 101. காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181) 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182) 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183) 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184) 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185) 106. விளக்கில்லையேல் வருகிறது இருள்….
133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…
133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….
முனைவர் இரெ. குமரனின் பிற நூலறிவையும் தரும் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் பா.சம்புலிங்கம்
திருக்குறள்–சிறப்புரை : முனைவர் இரெ. குமரன் முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின்…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது. அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு இன்றியமையாமையாதது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர். அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும் உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம். உலகம் சார்ந்தது: அகச்சான்று: சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு: தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல், பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்: குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார். பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து, மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு. வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார்…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4: பேராசிரியர் வெ.அரங்கராசன் ஒப்பு நோக்குக: மன்னுயிரைக் காத்திடத் தம்முயிரை ஈவதற்[கு] என்றும் இருப்பர் சிலர். –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன் 2.குடும்பம் சார்ந்தது: தாம் அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது துன்பம் வரினும், தம் குடும்பதிற்கு இன்பம் தரும் அச்செயல்களைத் துணிவோடும் மனஉறுதியோடும் இறுதிவரை முயன்று வெற்றியுடன் செய்து முடித்தல் வேண்டும். அகச் சான்றாக ஒரு குறள்மட்டும். அகச்சான்று: இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் …
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர் வெ.அரங்கராசன் துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்; இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று: துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி, இன்பம் பயக்கும் வினை. [குறள்.669] பொருள்கோள் விரிவாக்கம்: துன்பம் உற வரினும், துணிவினை ஆற்றி, இன்பத்தைப் பயக்கும் வினையைச் செய்க. பொருள் உரை விரிவாக்கம்: ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது…
என் பார்வையில் திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன் உரை
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையக்(Zoom) கருத்தரங்கம் 12 ஆடி 28, 2052 / வெள்ளி / 13.08.2021 மலை 6 .00 என் பார்வையில் திருக்குறள் 1 சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் குறி எண் (Meeting ID ) : 834 6167 5237 கடவுச் சொல் : 202020 இவண் தகடூர் சம்பத்து 98427 87845 / 88704 87845