நோய்பரப்பும் பன்றிகளைப் பிடிக்கும் தேவதானப்பட்டி பேரூராட்சி

தேவதானப்பட்டி பேரூராட்சியில் நோய்களைப் பரப்பும் பன்றிகளைப் பிடித்த பேரூராட்சி தேவதானப்பட்டி அருகே உள்ள சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளிலும் அல்அமீன் நகர் பகுதியிலும் நோய்களைப் பரப்பக்கூடிய பன்றிகள் உலாவருகின்றன.  இதனைக் கட்டுப்படுத்தவேண்டும் எனப் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர்  காவல்துறையும் பேரூராட்சி நிருவாகமும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து பன்றிகளை அப்புறப்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். அதன்பின்னர் பன்றிகளை வளர்ப்பவர்களுக்குப் பேரூராட்சி சார்பில்   எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வளர்த்து வந்ததால் பேரூராட்சி நிருவாக…

செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்

செயமங்கலம் பகுதியில் தீப்பற்றி எரியும்  மின்மாற்றிகள்   தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில்  மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில்  மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி  அருகே கயிறு தொழிற்சாலை,  கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன.  கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன்  கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும்   தொலைபேசி வழித் …

செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்! – வைகை அனீசு

செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு  உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின.   அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…

“மொழிப்போர் – 50 மாநாடு” – தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்! பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!     தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டியில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஐப்பசி 05, 2046 / அக். 22, 2015 காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.   தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர்.   சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ.ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை…

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ. தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டு் வரலாறு உடையது.# தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை. ஆகையால், அதற்கு முந்திய 12 நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தை போல் தனியே வளர்ந்து வந்தது. சங்கக் காலத்துக்கும் கி.பி. 7 – நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமற்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. சைன…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 : இலக்குவனார் திருவள்ளுவன்

16 சமய இலக்கியங்கள் அட்டவணை – 04 (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ மின்னூலாக்கம்   உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். “கவிதை “   முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.   மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.  ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.  சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை. கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி…

முதலமைச்சர் கணிணித்தமிழ் விருதின் முதல் விருதாளர் தெய்வசுந்தரம்

பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு முதலமைச்சர் கணிணித்தமிழ் விருது வழங்கப் பெற்றது!  முதலமைச்சர் கணினித்தமிழ் விருது (2013-14) வழங்கும் விழா புரட்டாசி 25, 2046 /  12-10-2015 திங்கள்கிழமை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார். இவ்விருது தோற்றுவிக்கப்பட்டதும் முதலாவதாக விருதினைப் பெறும் பெருமைக்குரியவர் பேரா.ந.தெய்வசுந்தரம். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், சமூகவளர்ச்சித்துறை அமைச்சர், செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், முதலமைச்சரின் அறிவுரைஞர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ‘ என்ற தமிழ்க்கணியனை(மென்பொருளை) உருவாக்கியதற்காக…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 – ஒளிப்படங்கள்

  கணிணிப்  பயன்பாட்டிற்காகத் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு   தோற்றத்தில் உருவாக்கிவருவதை விரிவாக்கவும் அதற்கான தேவையை உணர்த்தவும்  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 நாள்களில் நடைபெற்ற தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வருமாறு. பட உதவி :  நூ த.உலோ. சு. & அகரம் படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க! [embpicasa id=”6208526006627876513″]

விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு

திருவாட்டி விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 காலை 10.00 பெரியார் நகர் 5 ஆவது தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091  பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்! [embpicasa id=”6201627847108567345″]

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு   உலகத்     திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா      வள்ளுவர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015   காலை 10.00மணிக்கு நடைபெற்றது.   இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி   எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’  என்ற இரு  நூல்கள்   மேனாள்   துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.   அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் முனைவர்…