தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்

உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – இ.பு.ஞானப்பிரகாசன்

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! இ.பு.ஞானப்பிரகாசன் வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.  தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ…

மோடி அரசு பற்றி மாயத் தோற்றம் குசராத்தை விட தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்

 புள்ளி விவரங்களை அள்ளிவீசிய முதல்வர்   குசராத்துதான் முதன்மையான மாநிலம் என்பது ஒரு மாய த் தோற்றம் என்றும் பல துறைகளில் குசராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்றும் முதல்வர் செயலலிதா புள்ளிவிவரங்களுடன் பேசினார். கிருட்டிணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டுச்சாலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக்கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது; சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பா.ச.,  தலைமயர் வேட்பாளரும், குசராத்து முதல்வருமான நரேந்திர மோடி, அ.தி.மு.க.,வை, தி.மு.க., உடன் இணைத்து,…

செய்திக்குறிப்புகள் சில : அகரமுதல இதழ் 18

 மும்பையில்,  1  உரூபாய்க்கு 1  புதுப்படி(இலிட்டர்) நீர் தரும்   எந்நரேமும் இயங்கும் நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர்  பெறலாம்.. சொகுசுப் பேருந்துகளில்  வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள் இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில் இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள் இவற்றுடன்தான்  விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது….

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

  பேரன்புடையீர், வணக்கம்.  தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும்  அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும்  வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர்,  ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.   ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே  ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….

ஒருங்குகுறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் -கருதத்தக்கன

தமிழ் இணையக் கல்விக்கழகம் ‘ஒருங்குகுறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ – ஒருநாள் கருத்தரங்கம் 21.02.2045 / 05.03.2014   சென்னை கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்     மேற்குறித்த தலைப்பிலான த.இ.க. கருத்தரங்கத்திற்குக் கட்டுரை அளிப்பது தொடர்பாக இயக்குநருடன் தொடர்பு கொண்ட பொழுது யாரிடமும் கட்டுரை வாங்கவில்லை என்றும் உத்தமம், கணித்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள், என்றும் பார்வையாளர்கள் அவற்றின் அடிப்படையில் கருத்துகளை வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அவ்வாறாயின் இந்நிகழ்வு சொற்பொழிவுக்கூட்டம் என்றுதான் கருதப்பட வேண்டும். அனைவரிடமும் கட்டுரை கேட்டு…

செய்திக்குறிப்புகள் சில

    ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க  நாடாளுமன்றில்அறிக்கை     இந்தோநேசியாவில் காநீர்ப்பழத்தை உண்ணும் புனுகுப்பூனையின் கழிவில் வெளியேறும் கொட்டையிலிருந்து உருவாக்கப்படும் காநீர் : 1 குவளை 5,000 உரூபாய் நிதி முறைகேடு தொடர்பாகச் சீக்கிய அமைப்புக்கள்  தொடுத்த வழக்கில் இந்தியத் தலைமையாளர் மன்மோகனுக்கு  அழைப்பாணை அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்   தேர்தல் நாடகம் : இலங்கைக் கடற்படை மீது, இராமேசுவரம் காவல்நிலையத்தில்  கண்துடைப்பு வழக்கு மரபணு மாற்றப்பட்ட…

செய்திக்குறிப்புகள் சில

வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார் உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,  புதிய கட்டடங்களை முதல்வர் செயலலிதா திறந்து வைத்தார்.   உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன்  தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள உ.வே.சாமிநாத(ஐய)ர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து  வணக்கம் தெரிவித்தார்கள்.   மொகாலி: பஞ்சாப் மாநில வேளாண் மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற …

‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி” இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை…

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்

  தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் கோபி பள்ளி ஏன் தொடங்கப்பட்டது? மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது என எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது…

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்

    பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14)  சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.   தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்

இனப்படுகொலை காங்.கிற்கு எதிராகத் தமிழ் மாநிலக் கக்கன் காங்கிரசு

பேராயக்கட்சி ஆட்சியல் உள்துறை அமைச்சராக இருந்தும் எளிமையால் பெயர் பெற்றவர் கக்கன்.  இவர் போன்ற உழைப்பாளிகளையும் ஈகையரையும் பேராயக் கட்சி புறக்கணித்தது. அவர்கள் கருத்துகளை ஒதுக்கித் தள்ளியது. இதனால் பேராயக் கட்சியான காங்.கில் பலர் மனப்  புழுக்கத்தில் உள்ளனர்.  அவர்களில் ஒரு பகுதியினர்  கக்கன் பெயரில் தமிழ் மாநிலக் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்க உள்ளனர். மதுரை மாவட்டத் துணைத்தலைவராகக் காங்.கில் இருந்த பெரியசாமி இதற்கான ஏற்பாடுகளை ஆற்றி வருகிறார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்  செவ்வி அளித்தார். அப்போது அவர்  பின்வருமாறு கூறினார்….