(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்கியம் கூறும் காவிரி, திரு ; thalaippu_thamizharkkaana-kaviri_ilakkuvanar-thiruvalluvan

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70

 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள்

  52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும்

53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல்

 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 27.171(பஞ்சக்காலத்திலும்) பேணும்  காவிரிக்குரிய சோழனுக்கு

 55.காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 29.131 காவிரிக்குரிய சோழ நாட்டானைப் புகழ்ந்து பாடுவோம்

56.கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணிமேகலை 0/12கமண்டலத்தைக் கவிழ்த்து நீர்எடுத்த காவிரிப்பாவை

 57.தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணிமேகலை 3/55குறையாத நீர்ப்பெருக்கினையுடைய காவிரியின் தந்தை போன்ற தோற்றுவாயும்

58.கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணிமேகலை 5/39காவிரி கடலிற் கலக்கும்இடமாகிய பெரிய சங்க முகத்துறையில் நீராடுவதற்கு

59.சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணிமேகலை 15/48காவிரியில் நீர் சுரந்து பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும்

60.தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணிமேகலை 22/40தெளிந்த நீரையுடைய காவிரியாற்றில் நீராடி வருகின்றவள்

61.காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணிமேகலை 22/43 காவிரியாற்றின் கரையில் இருக்கும் பொழுது, சுகந்தன் மகன் நீ என்று சொல்ல

62.காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணிமேகலை 25/16காவிரியாற்றங்கரையின் பக்கத்தே உள்ள  நல்ல நகராகிய புகாரை யடைந்தேன்

63.காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற – மணிமேகலை 28/135

காவிரிப்பட்டின நகர் கடலால் கொள்ளப்படும் என்ற(தைக் கேட்டமையால் அங்கே போகாதிருந்தான்)

  64.    வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 7.3(சிவந்த கண்களையும்) வரிகளை(யும்) உடைய வரால் மீன் விளையாடும் காவிரிநாட்டிற்கு உரியவன்(செங்கட்சோழன்)

 65.    காவிரி நாடன்  – பொய்கையார், களவழி நாற்பது, 12.4காவிரிபாயும் நாட்டை உடையவன்

66.    கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 24.4 கண்ணிற்கு நிறைவாகக் காட்சியளிக்கும் மாலையணிந்த காவிரி நீர் பாயும் நாட்டிற்கு உரியவன்

 67.    கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 35.3 கரைகளை அழித்துச் செல்லும் காவிரி நாட்டை உடையவன்

68.    காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் – பொய்கையார், களவழி நாற்பது, 36.2காவிரிநாட்டையுடைய செங்கட்சோழன் கழுமலம் என்னும் ஊரினைக் கைக்கொண்ட நாள்

69.    காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்பர், இராமகாதை, அயோத்தியா காண்டம், 13.1.2 காவிரிவாயும் தமிழகத்துச் சோழநாட்டைப்போல் உயர்ந்த, கழனிகள் கொண்ட அயோத்திநாட்டை நீங்கி

 70.    குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்பர், இராமகாதை, ஆரண்ய காண்டம், 3. 46.4

(தொடரும்)

நன்றி : http://tamilconcordance.in/concordance_list-B.html

–  இலக்குவனார் திருவள்ளுவன்