இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான்
தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா?
நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன்,
“அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.
மாறுதல் ஆணைகளைக் கூடத் தமிழில் வெளியிடமுடியாத நிலையிலான தமிழ் மொழி உள்ளது? இன்று(29.05.26) வெளிவந்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை தமிழில் இல்லை. வழக்கம்போலவே ஆங்கிலத்தில் கோலோச்சுகிறது. இதற்கு அரசு எச்சரிக்கையோ அறிவிப்பா வெளியிடக் கூடாது.
ஒன்றிய அரசிற்கு- அனுப்புவதற்காகத்தான் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்ததாகக் கூறும் நாெண்டிச் சாக்கையும் ஏற்கக்கூடாது. அவர்கள்வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்ளட்டும். அல்லது இதன் ஆங்கிலப்படியை அவர்களுக்குத் தமிழக் அரசு அனுப்பட்டும்.
உடனடியாகப் பொதுத்துறைச் செயலர் வரையிலான தொடர்பான அலுவலர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுத்துக் குறைந்தஅளவு தண்டைனயாவது வழங்க வேண்டும். இதுதான் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் ஈடுபடச் செய்யும்.
இத்தகைய நேர்வுகளில் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலரே நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௭௰௧ – 671)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
வைகாசி 15, 2057/29.05.2026








Leave a Reply