தலைப்பு-உணவளித்தால் வாழ்த்துவரே, செல்லையா ;thalaippu_unavualithaal_vaazhthuvare

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே!

 

பசியென்று  வருபவரைப்,

பரிவுடன் பார்த்திடுவீர்!

புசியென்று உணவளித்து,

புன்னகையும் சேர்த்திடுவீர்.

கசியும் நீரூற்றாய்க்

கண் கலங்கிக் கேட்பவர்கள்,

பொசியும் இறையன்பால்,

பொங்கியுமை வாழ்த்துவரே!

– கெருசோம்  செல்லையா