வேண்டல் ஒருநாள் கூடிவரும்!

நீண்ட நாளின் விண்ணப்பம்,

நிறைவேறாது இருந்தாலும்,

ஆண்டவரின் நன்மக்கள்,

அண்டிக் கொள்வது அறமாகும்.

வேண்டல் ஒருநாள் கூடிவரும்;

விரும்பும் நன்மை தேடிவரும்.

தோண்டத் தோண்ட அருளூற்று,

தூயோர் வாழ்வில் உறவாகும்!

 

கெருசோம் செல்லையா