கிறித்து பிறப்பு வாழ்த்து - கெருசோம் செல்லையா
கிறித்து பிறப்பு வாழ்த்து!
இல்லா நிலையில் யாவும் படைத்த
இணையற்றவரே இறைவன்.
எல்லோருக்கும் மீட்பின் பொருளாய்
இப்புவி வந்தவர் மைந்தன்.
வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து,
வாழ வேண்டுமே மனிதன்.
நல்லாவியரால் நடத்தப்பட்டு,
நன்மை செய்வான் புனிதன்.
கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,
புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்!
-செல்லையா,
இறையன்பு இல்லம்,
செயலகக் குடியிருப்பு,
இரட்டை ஏரி, சென்னை.
Leave a Reply