aa.ve.mullainilavazhagan

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி)

காட்சி – 13

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     மரக்கிளை

நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப்

பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!)

ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா?

அன்பு மனைவியின் பணிவிடையை!

பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்!

பார்க்க அழகே! எனச்சொல்வேன்!

(என்றே மேடையை நோக்கிய பின்)

அதோ! அதென்ன ஒரு கும்பல்!

நின்றே கூட்டத்தின் நடுவினிலே

உரக்கக் கத்திப் பேசுவதேன்?

ஆண் :     பேடை இப்படிக் கூறியதும்

ஆண்சிட்டு கூட்டத்தைப் பார்த்துவிட்டு

தாடையை சற்றே நீவிவிட்டு

ஆய்! அதென்ன! எவரேனும்

கல்லால் மேடையை நோக்கியே

ஏய்! என்றே எறிந்திருப்பார்!

சொல்லால்விட்டால் மேடைக்குச்

செல்லாதென்பது அவர் எண்ணம்!

பெண் :     (என்றதும் பேடையோ முகம் திருப்பி)

எதுவாய் இருந்தால் நமக்கென்ன?

நன்றே இவர்கள் பேசுவது

காதில் விழுவதால் கேட்டிடுவோம்!

  (பாடும்)

two-sparrows04