thamizhnaatu01

அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய

நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும்

நாவலந் தீவின் நாடியாய் விளங்கும்

பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம்

                மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5

 

காவலர் மூவர் கயல்புலி வில்லெனும்

கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது;

சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப்

பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு;

`யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்      10

         றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி

வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை

தருவது தொழிலாத் தான்கொண் டதுவே;

–          பூங்கொடி: 1. விழாவயர் காதை

mudiarasan01 

 உடீஇய – உடுத்த, மேவலர் – பகைவர், கெழுமிய – பொருந்திய, கோலோச்சியது – செங்கோல் செலுத்தியது, நிறீஇ – நிறுவி, கேளிர் – உறவினர், ஆளுகை – ஆட்சி, இலங்கிட – விளங்கிட.