தமிழினத்திற்கு   வாழ்வா ?   சாவா ?  

1.

அன்றுதொட்டே  இன்றுவரை அறத்தமிழை  இனத்தினை   

அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன்

நன்றிகொன்று  நாடோறும் ஞாலமதில்   வாழ்பவர்

நடுநிலையும் நயன்மையையும்  நாடாத   இனமதே 

இன்றுமுற்றாய்  அழிப்பதற்கே  ஏறியுமே ஆட்சியில்

இயற்றுகிற  சட்டமதை  எண்ணியுமே காத்திட

ஒன்றிணைய  வேண்டுமென்றே உள்ளமதில்   தேருக !

ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும்  அழியுமே !

2.

தனதுநலம்  புறந்தள்ளித்  தமிழினத்தைக் காப்பதே

தலையாய  கடனென்று  தமிழினமே  உணருதல்

தனதுநல  முதற்படியாய்  நெஞ்சமதில் தேருக !

தமிழ்மொழியே  தன்னினத்தைக் காக்கவல்ல  தென்றுமே

தனதுநெஞ்சில்  பதித்தென்றும்  குறியாககக்  கொள்வதே

தமிழ்ப்பகையாம்  ஆரியத்தை  வெல்லுகின்ற   கருவியே

இனங்காக்க  மொழிகாக்க  அடலேறாய்த்   தமிழினம்

எழுகதிராய்  எழுந்துபகை முடிப்பதற்கே  ஒன்றுக !

                    புலவர் பழ.தமிழாளன்

            இயக்குநர் -பைந்தமிழியக்கம்

                         திருச்சிராப்பள்ளி