mudiarasan01

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்

சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே

தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்

கிலையென்றால் இன்பமெனக் கேது.

பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்

ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்

மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே

சாவா வரமெனக்குத் தா.

தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே

என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால்

தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்

அடிக்கே எனையாண் டருள்.

– பூங்கொடி