திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள்    மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++           வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்

  திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார்? ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்