kavi-uravu

 

வல்லுணர்ச்சி கொண்டசிலர் இணைந்து கொண்டு

   வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க,

நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;

   நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்;

நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;

   நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்;

மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;

   மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.

 

அன்புடன் 

சுமதிசுடர்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/01/Sudar8-230x250.png