aa.ve,mullainilavazhagan

காட்சி – 11 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     மரக்கிளை

நிலைமை  :

(நாடகம் பார்க்கும் ஆவலிலே

நவின்றிடும் பேடை எண்ணாது

கூடாக் கோபத்தை துணைக்கொண்டு

கொட்டுது சொற்களை ஆண்சிட்டு)

பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான்

பேசுகிறார்களோ புரியவில்லை!

எப்பவும் இவர்கள் இப்படித்தான்

பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே!

ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே!

அதனால் நமக்கு வருவதென்ன?

செவனே என்று சில நாழி

பேசாதிருவேன் நீ கொஞ்சம்!

பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி

நாடகம் கூடத் தொடங்குதுபார்!

அசைவே இன்றி நாடகத்தை

அமர்ந்தே மக்கள் பார்ப்பதைப்பார்!

 

(காட்சி முடிவு)

(பாடும்)

Sparrow