naavaay_kappalvanigam_marinetrade01

தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம்
பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும்
ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத்
தாங்கும் தமிழரே தாம்.

பொங்கு கடல் கடந்து – சென்றிப்
பூவுலகத் தினிலே
எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர்
ஏகக் குலத்தவராம்.

கோடரி மண்வெட்டி – கலப்பை
குந்தாலி ஏந்துவோரே
நாடெலாம் ஆளுகின்ற – உண்மை
நாயக ராவாரையா!

பாழ் நிலத்தையெல்லாம் – திருத்திப்
பண்படுத்தி மக்கள்
வாழ் நிலமாகத் – தமிழர்
மாற்றிய தாரறியார்?

இலங்கை சிங்கபுரம் – பிசிமுதல்
இன்னும் பலவான
தலங்களின் செல்வம் – தமிழர்
தந்த செல்வமன்றோ?

– கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)