pongal vaazhthu01

ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா!

மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா!

கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு

விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த

உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு

கழனி உழுபடைக் கருவிகள் காளை

உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி

வயலில் வீட்டில் நாட்டில் எங்கும்

புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள்

இத்தரை யெங்கும் இன்பமே எனினும்

வெற்பினை எறிந்து வீரம் விளைத்த

அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன்

இற்றை நாளிலும் இந்தியச் சிறையில்

இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்?

00000

ஆரிருள் கவிந்த அழகிய ஈழம்

போரில் சிதைந்து புழுதி படிந்திட

பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு?

00000

முள்வேலி முகாமில் அழகிய ஈழம்

போரில் சிதைந்து புழுதி படிந்திட

பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு?

00000

முள்வேலி முகாமில் மூன்றரை இலக்கம்

கள்ளமில் தமிழர் கலங்கும் வேளையில்

எள்மூக் களவும் இல்லையே இன்பம்?

00000

முள்ளி வாய்க்கால் முற்ற மதிலை

நள்ளிருள் விடியுமுன் நாசமாக்கிய

ஆரிய அரக்கி ஆளும் நிலத்தில்

சீரினை இழந்தபின் தீஞ்சுவைப் பொஙகலேன்?

00000

கண்ணீர்க் கடலில் கையறு நிலையில்

தண்டமிழ் மீனவர் தவிக்கும் போழ்தில்

காணும் பொங்கலும் கசக்குதே   வேம்பாய்!

00000

 கொள்ளை இலாபம் கூடி அடிக்க

வெள்ளையர் தொழிலக வாணிகம் கொழுக்க

கழனிவாழ் உழவரைக் கவலையில் ஆழ்த்தி

உழவை உள்ளூர் தொழில்களை அழிக்கும்

கொடுமை இந்தியம் கூத்திடும் நாட்டில்

வடித்த சருக்கரைப் பொங்கலும் புளிக்குதே!

00000

ஆயிர மாண்டாய் அடிமையாய் உழன்று

நாயினுங் கீழாய் நலிந்து கிடந்த

தாயினங் காக்க தமிழ்த்தோ ளுயர்த்தும்

கார்த்திகைப் பிறந்த காவிய நாயகன்

ஆர்த்தெழும் புலியாய் அடற்றகை மிளிர

போர்க்கள மாடிப் புகழ்தமிழ் ஈழம்

பார்மிசை விடுதலைப் பண்ணை இசைக்கையில்

பொங்குக பொங்கல் பொறுப்பீர் அதுவரை!

00000

சேரர் சோழர் பாண்டியர் வழியில்

வீரம் விளைத்து விதையாய் வீழ்ந்த

புலிகள் தாயகத் தாகம் தணிகையில்

பொலிக இன்பம் பொங்குக பொங்கல்!

00000

சீறியே பாயும் சேயிழை யோடு

ஏற்றினைத் தழுவும் இளையோர் வாலில்

கடும்பகை மோதிக் கரிகால் வளவன்

விடுதலைப் போரை வெல்லும் நாளே!

பொங்கல் திருநாள்! புத்துயிர் பெறும்நாள்!

பொங்கும் மகிழ்வால் பொங்கலைப் படைப்போம்!

செங்கள மாடிய செந்தமிழ்ப் புலிக்கே!