பொங்கல் திருநாள் – திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து!

  சாதியும் சமயமும் நாளும் அழிப்பன! அன்பும் அறனும் என்றும் வளர்ப்பன! அறநெறி போற்றுவோம்! அல்லவை போக்குவோம்! தமிழ்நலம் காப்போம்! உயிரினம் மதிப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை அகரமுதல 221  தை 01 – 07, 2049 , சனவரி 14-20,2018  

பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…