(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2

மோனைப்புலவன் – அல்லி

அகவல்

அல்லி :ஏனையாபுலவரேஎன்னவியப்பிது
 கன்னிநான்வருதலைக்கண்ணாற்கண்டும்
 புன்னைநிழலில்பொருள்தேடுகின்றாய்
 தின்னுங்கருவாடுதிகட்டுமோபூனைக்கு
 கன்னியென்பார்வைகசந்ததோநினக்கு
     
மோனை :அய்யகோஅத்தைமகளேஅல்லியே
 சத்தமிட்டுநீசகலமும்பேசேல்
 நாளைநம்மன்னன்நவிலவுங்கூடும்
 காளையர்யாரும்கன்னிப்பெண்ணும்
 காதல்செய்தால்கசையடிஉண்டென
     
அல்லி :அப்படிஆணைஅரசனேயிட்டால்
 தப்பேதுமில்லைசலிப்பேயின்றி
 மோனைக்கவிதைமுழங்கித்திரியும்
 கேலிச்செயலைக்கீழெனத்தள்ளி
 எந்நாள்நீயெனைமணப்பாய்அறியேன்
     
மோனை :அத்தைமகளேஎன்னாருயிரே
 இக்கணம்சரியெனஒப்புவையாயின்
 அக்கணங்கொணர்வேன்அழகொளிர்ஆரம்
 ஆற்றில்குளிக்கும்அழகியபெண்களை
 விரசநோக்கில்சரசநினைப்பில்
 அரசமரத்தின்அடியில்அமர்ந்தே
 நோக்கும்தொப்பையார்அடிவயிறெரிய
 தொடங்கிடவாழ்வுதுடிகின்றேன்நான்
     
அல்லி :தமிழ்க்குப்பேரிடர்தாவிவருதலை
 இமைப்போதுமெண்ணாமல்நீயிங்கே
 காதல்மொழியில்களித்திருக்கின்றாய்
 உன்போல்ஆண்கள்மண்மேல்உலாவல்
 புல்லும்நெல்லொடுபொலிதல்போன்றதே
     
மோனை :மாமன்மகனைமங்கைநீமணந்தால்
 மாத்தமிழ்மாயுமோஅய்யகோஈதென்
 வியப்புறுவிளக்கம்விளம்புகநீயே
     
அல்லி :சங்கத்தமிழைமங்கைக்குரைத்த
 சிங்கக்கவிஞன்செத்தால்தமிழ்தான்
 பங்கமுறுதல்பாவிநீமறந்தாய்  
மோனை :பொடியன்உதாரன்போய்த்தீர்ந்தால்தமிழ்
 பொடியாகுமெனப்புலம்புவதென்ன
 விரிவாய்நீதான்விளம்பினாலென்ன

அறுசீர் விருத்தம்

அல்லி         :         தமிழைப்             பயிற்றும்             புலவன்தான்

                                      தமிழை               வளர்க்கும்           நீராவான்

                             உமியைக்            குத்தி                             உணவாக்க

                                      உலையி              லாரும்                 இடுவாரோ

                             இமைக்குள்                  இருக்கும்             பாவைபோல்

                                      எமது                    மொழியைக்                 காப்பாற்றித்

                             தமிழைப்             பயிற்றும்             புலவோரைத்

                                      தலையா             யுயர்த்தல்            கடனன்றோ

                             விழியைக்            குத்திப்                புண்ணாக்கி

                                      விருந்து               படைக்குஞ்                   செயலாக

                             மொழியை          வாழ்த்திச்            சிலபேரும்

                                      முனக                  லின்றி                 மறைவாகப்

                             பழியைச்             சூழ்வார்               புலவோர்க்குப்

                                      பழிப்பா               மன்றோ          அவர்செயல்தான்

                             அழிவு                  புலவர்க்               காமாயின்

                                      அழியுந்                தமிழ்தான்           அறிவாயே

                             பீடு                      நிறைந்த             உணர்வைத்தான்

                                      பிறந்த                 மொழியே            யல்லாமல்

                             ஏடு                       தூக்கிக்               கற்கின்ற

                                      எந்த                     மொழியுந்           தாராது

                             நாடு                    வாழ                    நலம்பெருக

                                      நலஞ்சேர்            தமிழும்                வேண்டாமோ

                             கேடு                    செய்தால்            புலவோர்க்குக்

                                      கெடுவது             தமிழே                 உணர்வாயே

அகவல்

மோனை :நன்றுசொன்னாய்நங்காய்நாளை
 அவையிலேஅரசன்அருந்தமிழ்க்கவிஞன்
 கேடுறஆணைகிளத்துவனாயின்
 அறம்பாடிநானேஅதனைத்தடுப்பேன்
     
அல்லி :மோனைப்புலவனேமோசஞ்செய்யேல்
 அசட்டுப்பிசட்டென்றவையில்உளறின்
 வசமாய்ச்சிக்கிவதைபட்டழிவாய்
     
மோனை :அடியேன்ஆற்றலுக்கணைபோடுகிறாய்
 பிணைந்தோர்தம்மைப்பிரியாதுகாத்திட
 வகுத்ததிட்டம்வகையாயெனக்கு
 பகையாயெண்ணாதுரைப்பாய்பாவாய்
     
அல்லி :நடந்தநடப்பைநாட்டார்உணர
 எங்கள்தலைவிஇயம்புவாளவையில்
 பொங்குந்தமிழ்க்கவிதன்னிலைஉரைப்பார்
 பழகுந்தமிழ்க்குநேராதுபழியென
 நானினைக்கின்றேன்ஆனாலுமொன்றை
 உனக்குநானுரைப்பேன்உள்ளங்கொள்க
 எங்கள்தலைவிக்கேதுமாமெனின்
 தங்காதென்னுயிர்சொன்னேன்உறுதி
     
மோனை :பதறாச்செயல்தான்சிதறாதென்றே
 பகர்ந்தமொழியைப்பாவாய்மறவாய்
 நற்றமிழ்க்கவிஞன்நல்லுயிர்காத்துக்
 கொற்றவன்மகளொடுகூட்டுவொம்நன்மணம்
 சித்தங்கலங்கேல்செந்தமிழ்பழிப்புற
 வாழ்தலேசாதல்சொன்னேன்வஞ்சினம்

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம்புதிய புரட்சிக்கவி