உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்)

அந்நாளில் சீருள் – பூஞ்

செந்தேனைக் கொண்டோள் ஔவை!

பண்பாடி ஈர்க்கும் – பூம்

பெண்வேங்கைச் சொற்கோ ஔவை!

தன்வாழ்வில் மீளும் – ஊழ்

வென்றேழ்மை கொன்றோள் ஔவை!

பண்வானின் மீனுன் – பூ

வெண்மேன்மைப் பொற்போ ஔவை?

 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்