(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி)

தமிழ்த்தாய் வணக்கம் 21-23

 

பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம்

நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக்

கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார்

சீறா துறாரே தெளிவு (21)

 

நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை

வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச்

சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே !

வாராய் துணையாக வா. (22)

 

அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச்

செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு

என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே

றொன்றும் கொளாதென் உளம். (23)

பாவலர் நாரா. நாச்சியப்பன்