தலைப்பு-ஊர்க்காதல், பாரதியார்;thalaippu_uurkkathal_bharathy

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார்

நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,

நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;

ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே

ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்;

பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்;

பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து

முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே!

– பாரதியார்