கறுப்புப் பூனை

 

கறுப்புப் பூனை கண்கள் மூடி

என்ன பண்ணுது? – அங்கு

என்ன பண்ணுது? – அது

கடந்து போகும் எலியைத் தின்னக்

காத்திருக்குது! – அங்குக்

காத்திருக்குது!

 

சுறுசுறுப்பாய் ஓடும் எலி

என்ன பண்ணுது? – அங்கு

என்ன பண்ணுது? – அது

தூங்கு கின்ற பூனைக் காலைப்

பார்த்திருக்குது! – காலைப்

பார்த்திருக்குது!

 

சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள்  பக்கம் 31