வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்

மண்ணில் வீழ்ந்த

மலரே மீண்டும்

மரத்தை அடைகிறதோ! – அட!

வண்ணப் பூச்சி

வந்தென் முன்னர்

வலம்தான் வருகிறதோ!

விண்வில் ஒடிந்து

விழுந்தொரு துண்டு

விரைந்து வருகிறதோ! – அட

வண்ணப் பூச்சி

வனப்பின் நிறந்தான்

வகையாய்த் தெரிகிறதோ!

 

தண்ணீர்ப் பரப்பில்

தகதக வென்றே

தங்கம் சொலிக்கிறதோ! – அட

வண்ணப் பூச்சி

வான்மண் எங்கும்

வரைந்து களிக்கிறதோ!

 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள்  பக்கம் 34