ஒன்பதின்மருக்குத்

தமிழக அரசின் விருதுகள்  அறிவிப்பு

2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் தமிழக அரசின் விருதுகள் வரும் தை03 – சனவரி 16 அன்று  சென்னையில் வழங்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழாவில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.  விருது பெரும் தமிழறிஞர்கள்   நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை,  தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கிச் சிற்ப்பிக்கப்படுவர்.

 

விருதாளர்கள் :

 

அ.சுப்பிரமணியன் –   அண்ணாவிருது,

தா. இரா.தினகரன் –  காமராசர் விருது, 

கோ. பெரியண்ணன் – திருவள்ளுவர் விருது, 

முனைவர் ப.மருதநாயகம் – முத்தமிழ்க்   காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

மேனாள் அமைச்சர் பா.வளர்மதி – தந்தை பெரியார் விருது,

எழுத்தாளர் வை.பாலகுமாரன் – தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

கே.சீவபாரதி –  பாவேந்தர் பாரதிதாசன் விருது

முனைவர் சு.பாலசுப்பிரமணியன்  (எ) பாரதிபாலன் –  மாக்கவி பாரதியார் விருது

 

இவ்விழாவில்  அகவை முதிர்ந்த  தமிழறிஞர்கள் 50 பேருக்கு மாதந்தோறும் உரூ.2,500 – மருத்துவப்படி உரூ.100 வழங்குவதற்கான அரசாணைகள் வழங்கப்படுகின்றன.