தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன.

செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன்  27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி  தலைமையில் விருது பெற்றவர்கள்:

  1. குரு.சம்பந்தம் – தொல்காப்பியர் விருது
  2. கோ.செழியன் – கபிலர் விருது
  3. சா.கா.பாரதிராசா – இளங்கோவடிகள் விருது
  4. ம.ச.முனுசாமி – ஒளவையார் விருது
  5. நாகை மனோகரன் – திருமூலர் விருது
  6. சு.பழனிச்சாமி – கம்பர் விருது
  7. அசோகன் – செயங்கொண்டார் விருது
  8. தயானி அன்பு – ஆண்டாள் விருது
  9. இராம.மாணிக்கம் – அப்பர் விருது
  10. கோ.வெள்ளைச்சாமி – வள்ளலார் விருது
  11. கோசுவா சாம்டேனியல் – கால்டுவெல் விருது
  12. சந்திரசேகர் – உ.வே.சா. விருது
  13. அமுதகீதன் – மறைமலை அடிகள் விருது
  14. இ.மணிவாசகன் – பாரதிதாசன் விருது
  15. செங்கை பூ.சுந்தரம் – பெரியார் விருது
  16. வெற்றிக்கண்ணன் – அண்ணா விருது
  17. த.கு.கருணாநிதி – கலைஞர் விருது
  18. பாரதி சிபுரான் – புதுமைப்பித்தன் விருது
  19. தோ. உருக்மாங்கதன் – பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் விருது
  20. மல்லை தமிழச்சி – செயகாந்தன் விருது
  21. பேராசிரியர் கிள்ளிவளவன் – பாரதியார் விருது
  22. முத்துக் கிருட்டிணன் – கண்ணதாசன் விருது
  23. உமர்தாசன் – அப்துல் ரகுமான் விருது
  24. நா.மணிமாறன் – வைரமுத்து விருது
  25. சிவக்குமார் – வைரமுத்து விருது
  26. செந்தமிழ் – வைரமுத்து விருது
  27. வல்லம் சோமு – வைரமுத்து விருது

கு.இராசா, அ.அசோக்கு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். பிரவீன், மோகன், முத்துகிருட்டிணன், மா.பாலகிருட்டிணன், சுனில்குமார், எழிலரசன், பிற தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்