கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது
கோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது
![kovairamakrittinan-poraliviruthu11]()
நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி
பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம் – நூல் அறிமுகம்
ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும் புத்தக அறிமுக நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.
புலவர் செந்தலை நா. கவுதமன் அவர்கள் புத்தகத்தின் அறிமுக உரையினை நிகழ்த்தினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கோவை கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கு, 1800 சாதி மறுப்புத் திருமணங்கள் நடத்தி வைத்ததற்காக, “சமூக நீதிப் போராளி” எனும் விருது, வழங்கினார்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர். நடராஜன் அவர்கள் விருதினை வழங்கினார்.
Leave a Reply