சூசை-விருது01 : suusai_virudhu01

  அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது அளித்த நிகழ்வு தை 03, 2047 / சனவரி 17,  2016 அன்று மாலை திருவரங்கம் சிறீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

   விடுதலைவாசகர்வட்டம் மானமிகு மீனாட்சிசுந்தரம் வழக்கறிஞர் அரிகரன் முதலான நண்பர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இருநூறுபேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திக, திமுக, மதிமுக, காங்கிரசு, பா.ச.க. கட்சிகளில் உள்ள இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். நண்பர் முனைவர் நெடுஞ்செழியனார், பெரியார் பாசறை அன்பழகனார் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் நாச்சிமுத்து ஐயா, திருவரங்கம் தமிழ்ச்சங்கம் செயபாலனார் முதலான பலரும் வந்திருந்து வாழ்த்தினர்