இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி

  புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.

  புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். செயலாளர் நெ.நடராசன்  வரவேற்றுப் பேசினார். பொ.கு.உறுப்பினர் விலாசினி, விடுதலைவாசகர் வட்டத் தலைவர் சடகோபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செய்தியாளர் சிவராசன்   நன்றிகூறினார்.