(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1 தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
மோனைப்புலவன் – அல்லி
அகவல்
அல்லி :ஏனையாபுலவரேஎன்னவியப்பிது கன்னிநான்வருதலைக்கண்ணாற்கண்டும் புன்னைநிழலில்பொருள்தேடுகின்றாய் தின்னுங்கருவாடுதிகட்டுமோபூனைக்கு கன்னியென்பார்வைகசந்ததோநினக்கு மோனை :அய்யகோஅத்தைமகளேஅல்லியே சத்தமிட்டுநீசகலமும்பேசேல் நாளைநம்மன்னன்நவிலவுங்கூடும் காளையர்யாரும்கன்னிப்பெண்ணும் காதல்செய்தால்கசையடிஉண்டென அல்லி :அப்படிஆணைஅரசனேயிட்டால் தப்பேதுமில்லைசலிப்பேயின்றி மோனைக்கவிதைமுழங்கித்திரியும் கேலிச்செயலைக்கீழெனத்தள்ளி எந்நாள்நீயெனைமணப்பாய்அறியேன் மோனை :அத்தைமகளேஎன்னாருயிரே இக்கணம்சரியெனஒப்புவையாயின் அக்கணங்கொணர்வேன்அழகொளிர்ஆரம் ஆற்றில்குளிக்கும்அழகியபெண்களை விரசநோக்கில்சரசநினைப்பில் அரசமரத்தின்அடியில்அமர்ந்தே நோக்கும்தொப்பையார்அடிவயிறெரிய தொடங்கிடவாழ்வுதுடிகின்றேன்நான் அல்லி :தமிழ்க்குப்பேரிடர்தாவிவருதலை இமைப்போதுமெண்ணாமல்நீயிங்கே காதல்மொழியில்களித்திருக்கின்றாய் உன்போல்ஆண்கள்மண்மேல்உலாவல் புல்லும்நெல்லொடுபொலிதல்போன்றதே மோனை :மாமன்மகனைமங்கைநீமணந்தால் மாத்தமிழ்மாயுமோஅய்யகோஈதென் வியப்புறுவிளக்கம்விளம்புகநீயே அல்லி :சங்கத்தமிழைமங்கைக்குரைத்த சிங்கக்கவிஞன்செத்தால்தமிழ்தான் பங்கமுறுதல்பாவிநீமறந்தாய் மோனை :பொடியன்உதாரன்போய்த்தீர்ந்தால்தமிழ் பொடியாகுமெனப்புலம்புவதென்ன விரிவாய்நீதான்விளம்பினாலென்ன
அறுசீர் விருத்தம்
அல்லி : தமிழைப் பயிற்றும் புலவன்தான்
தமிழை வளர்க்கும் நீராவான்
உமியைக் குத்தி உணவாக்க
...