(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 தொடர்ச்சி)
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11&12
பதினொன்றாம் பாசுரம்
களப்பிரரையும் வென்ற கன்னித்தமிழ்
அளப்பரிய ஒண்புகழால் ஆண்டவன்பொ றாமல்
வளப்பமுறு தண்டமிழை வாடச் செய்தானோ?
களப்பிரனின் காலத்துக் காரிருள் சூழ்ந்து
களிப்பூறும் மாவாழ்வு காணா தொளியப்,
பளிக்கறைமேல் தூசி வளிவர நீங்கல்போல்
ஒளிகுன்றாள் ஆகித், தனைச்செயவே செய்து
வெளியார் சமணரையும், பௌத்தரையும்
வென்றாள்;
எளியாள் தமிழணங்கின் ஏற்றஞ்சொல்,
எம்பாவாய் !
பன்னிரண்டாம் பாசுரம்
பெருமையில் தாழாத தமிழ்
ஒருவானங் ...