(திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
03. காமத்துப் பால்
14. களவு இயல்
111. புணர்ச்சி மகிழ்தல்
தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த
இன்பத்தை, எடுத்துக் கூறுதல்.
(01-10 தலைவன் சொல்லியவை)
கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும்,
ஒண்தொடி கண்ணே உள.
கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து,
தொடுஇன்பம் இவளிடமே உண்டு.
...