image-18561

வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்

ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை - தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே - தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்  
image-18557

கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம் (கி.பாரதிதாசன்)   மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் 'சொல்லோவியம்' என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் ...
image-18478

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் ...
image-18533

12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை

தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:   (1)  ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com   (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி  முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com   அன்புடன்   நூ த (உ)லோ சு  மயிலை 
image-18502

‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும் ...
image-18485

திங்கள் பாவரங்கம் 90

மாணவர்  பொதுநலத்தொண்டியக்கம் கார்த்திகை14, 2046 / நவம்பர் 30, 2015 மாலை 6.30 புதுச்சேரி 9 தமிழ்ப்போராளிகளுக்கு வீர வணக்கம் மரபுப் பாவரங்கம் புதுப்பாவரங்கம் கழக இலக்கியம் அறிமுகம் மொழிபெயர்ப்புப் பாவரங்கம் துளிப்பா அரங்கம் சிறார் பா பாவரங்கம்
image-18264

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05   இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ...
image-18495

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சென்னை

கார்த்திகை 15, 2046 /  திசம்பர்  01, 2015 மாலை 6.00 கருத்தரங்கம் பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடு திராவிடர் விடுதலைக் கழகம்
image-18493

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 70, திருவாரூர்

  மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 மாலை 6.00 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் சிறப்புரை  முனைவர் இ.சுந்தரமூர்ததி
image-18444

செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்

செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் ...
image-18440

செய்ந் நன்றி கொன்ற இந்தியம் – வேங்கடசாமி சீனிவாசன்

  உதவுநர் இனத்தை அழிக்கத் துணை நிற்கும் இந்தியம்! ஐம்பது ஆண்டுகளுக்கு, இதே மாதத்தில் (20.11.1964 அன்று சென்னையில் ) இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதியாக (இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக ) அன்றைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாத்திரி அவர்களிடம் 1,00,00,000 கிராம் தங்கத்தைத் தமிழ்த் தாயின் பிள்ளைகள் வாரிக் கொடுத்தார்கள் ! ஆனால் ... சொந்த உடன் பிறப்புகள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப் பட்டது கண்டு தமிழகம் துடித்த போதும் ...
image-18437

நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? – செந்தமிழினி பிரபாகரன்

புதைக்கப் புதைக்கவே எழுகின்றோம்! கல்லறைகளைத் தகர்த்து எறிந்தால்.. மண்ணுக்குள் உயிரோடு புதைத்து மண்ணோடு மண்ணாக உக்கி உருக்குலைத்தால்.. மனங்களை விட்டு மறைந்து போகுமா மாவீரம்???? மூடரே! பொறிக்கப்பட்ட உணர்வுகளைப் பொறி கக்கும் தீத் துளிகளாய் நெஞ்சுக்குள் சூல் கொண்டு நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? நெஞ்சுக்குள் எரியும் தீயாக, தமிழர் உள்ளத்தில் கனன்றெழும் வேட்கையாக , கந்தக மேனியர் உயிர் கொண்டு வாழ்வதை காடையர் நீர் அறிய மாட்டீர்! புதைக்கப் புதைக்கவே நாம் விதையாய் எழுகின்றோம்!. அழிக்க அழிக்கவே நாம் செழித்தோங்கி வளர்கின்றோம்! தடைகளே தகர்க்கத் துடிக்கும் பகைகளே வாரும்! வந்து எம்மை எச்சமின்றித் தடை செய்யும்! மிச்சமின்றி தகர்த்தெறியும்! எச்சரிக்கின்றோம்!!! நாம் மூச்செறிக்கும் முன் கொட்டமடித்து ஆடி முடியும்! நாங்கள் வீறு கொண்டு எழு முன் எமை அழித்து முடியும்! ஏனென்றால்... உங்கள் விழி காணா எச்சத்தின் மிச்சத் துகளில் இருந்து நாம் பொறி பற்றி படரும் காட்டுத் தீயாக அழிப்பு ஆற்றலாக உரு மாறும் காலம் நாளை வரலாம்.. அன்று அழிவைத் தாங்க உங்களால் முடியாது!!! அநீதியைப் பொசுக்கும் ஊழித்தீயாய் மாவீரர் எம்முள் வாழ்வதறியாத முட்டாள்களே! நாம் அழிவுகளில் இருந்து மூண்டெழும் தமிழினம்! குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! எங்கள் மீண்டெழும் எழுகை வரலாற்றை காலங்கள் குறிப்பெடுக்கும் என்றோ ஒரு நாள் காலங்களை நாம் குறிக்கும் காலம் வரும்! அது வரை.. விழ விழ எழும் இனமாய் மீண்டெழ எங்கள் வேர்களுக்கு நீர் வார்க்க எம்மைத் தடை செய்து தகர்த்தெறியும்! செந்தமிழினி பிரபாகரன்