image-16445

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக ...
image-16440

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! - அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! - அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! - அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? - அருவினை -திருக்குறள் கவிஞர் சொ.பத்மநாபன் 98408 43981
image-16388

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என ஞாலப் ...
image-16501

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி - WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு - அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா ...
image-16435

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை

  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் ...
image-16382

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை

(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும்.   அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,       உள்அழிக்கல் ஆகா அரண்.   அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.   சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,       நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.   அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.   எப்பொருள், ...
image-16379

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி

(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி.   செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம்,       செல்வத்துள் எல்லாம், தலை.        செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த         செல்வம், கேள்விச் செல்வமே.   செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது,       வயிற்றுக்கும், ஈயப் படும்.        காதுக்குக் கேள்வி நல்உணவு         இல்லாப்போதே, வயிற்றுக்குச் ...
image-16375

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை

(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி)     02. பொருள் பால்  05. அரசு இயல்    அதிகாரம் 041. கல்லாமை           கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும்,              பல்வகைத் தீமைகளும், இழிவுகளும்.   அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய       நூல்இன்றிக், கோட்டி கொளல்.   நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல்.   கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும்      இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று.    கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் ...
image-16371

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி

(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040.   கல்வி   கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள்.   கற்க, கசஅறக் கற்பவை; கற்றபின்,       நிற்க, அதற்குத் தக.             படிப்பதைத் தெளிவாகப் படிக்க;         படித்தபின் படித்தபடி நடக்க.   எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,      கண்என்ப, வாழும் உயிர்க்கு.        அறிவியலும், இலக்கியமும், வாழும்         உயிருக்கு, இரண்டு கண்கள்.   கண்உடையர் என்பவர், ...
image-16368

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி

(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால்    05. அரசு இயல்  அதிகாரம்  039. இறை மாட்சி   ஆள்வோரிடம் அமைய வேண்டிய,  பேரறிவுத்   திறனும்,  பெரும்பண்புகளும்.   படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்       உடையான், அரசருள் ஏறு.       படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்         உடையான், நல்ல ஆட்சியான்.   அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்       எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.        அஞ்சாமை, கொடைமை, அறிவு,         ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.   தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,       ...
image-16363

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்

(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ்   உலக இயற்கை முறைமைகளை,   உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம்.   ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள்,    போ(கு)ஊழால் தோன்றும் மடி.     ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்;        போகுசூழல் சோம்பலால் பொருள்போம்.   பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும்,    ஆகல்ஊழ் உற்றக் கடை.     அழிவுச் சூழலில் அறியாமைஆம்        ஆக்கச் சூழலில் ...