(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி)
02.பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 039. இறை மாட்சி
ஆள்வோரிடம் அமைய வேண்டிய,
பேரறிவுத் திறனும், பெரும்பண்புகளும்.
படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்
உடையான், அரசருள் ஏறு.
படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்
உடையான், நல்ல ஆட்சியான்.
அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்
எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.
அஞ்சாமை, கொடைமை, அறிவு,
ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.
தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,
...