பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 15– ஆ.வெ.முல்லை நிலவழகன்
[முன்தொடர்ச்சி] காட்சி – 15 அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (கூடலுக்காக முற்றம் வந்தும் கூடிட அவளோ இல்லாததாலே ஊடல் அருணை வாட்டிடச் செய்ய! தேடியே குயிலை அலைகின்றான் தன்னுரையாக மனத்தில் எழுந்த எண்ணத்தை இங்கே உரைக்கின்றான்!) அருண் : வெள்ளி நிலா முற்றத்திலே பள்ளி கொள்ளவந்தால் நான்! கள்ளியவள் மறைந்தெங்கோ! தள்ளியயன்னைச் சென்றாளோ! மையிருட்டே! உன்னையவள்! பொய்யிருட்டாய் ஆக்கிடுவாள்! கைசுருட்டி ஓடி விடு! மெய்யுருட்டிச் சொல்லுகிறேன்! படுத்துறங்கும் வேளையிலே உடுத்தியவள் வருவாளோ? பால்பொழிய…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 12 அங்கம் : பூங்குயில், அருண் மொழி இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்: காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்: காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 11 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் : அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் : அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் : விசிலும் ஊதித் திரை நீக்கி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ பட்டென இருளைக் கிழித்தாற்போல் பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் : அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண் : உணவேயின்றி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல; கணவனே! வந்தேன்! பூங் : இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : குருவிக் கூடு நிலைமை : (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண் : இன்றென்ன! வருவோர்! போவோருமாக நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண் : பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்! “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்? அமிழ்தாய் இங்கு உரைத்தார்!…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை : (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…
தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன்
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றே முழங்கிய தமிழே வாழ்க! நாடும் மொழியும் தாயயன எம்மை! வணங்கிடச் சொன்ன தமிழே வாழ்க! அன்பே தெய்வம்! அறமே கோவில்! நன்றே சொல்லிய தமிழே வாழ்க! வீரமும் அறமும் உயிரெனச் சொல்லி! நெறிமுறை வகுத்த தமிழே வாழ்க! வறுமையில் இருந்தும் விருந்திடச் சொன்ன! பண்பிற் சிறந்த தமிழே வாழ்க! தீமைகள் செய்தால் நன்மைகள் செய்தே! திருத்திடச் சொன்ன தமிழே வாழ்க! அரசுக் கட்டிலில் புலவன் துயின்றும்! மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க! ஓளவைக்கு நெல்லிக்கனியினைக் கொடுத்து! மன்னவன்…