மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்!

  மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை  வரையறுத்துக் கொள்ளுங்கள்! மாவட்டக் கல்வி அதிகாரி  அறிவுரை  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘கவிதை சொல்லுதல்’ போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி மாணவர்களிடம்  மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை  வரையறுத்துக் கொள்ளுங்கள்  எனப் பேசினார்.     கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர்  சீவா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மாணவர்களிடம்…

மாணிக்கவாசகம் பள்ளியில்விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா

 மாணிக்கவாசகம் பள்ளியில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா    தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு  விழா நடைபெற்றது.    நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார்.   பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.  …

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏறக்குறைய 1320 பள்ளிகளில் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சார்பாக உலக அளவில் முதன் முதலாக இதற்கெனக் காணொலி ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   தேவகோட்டை, பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளைப் பள்ளித்…

மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி

  [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] தேவகோட்டை – பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.   விழாவிற்கு வந்தவர்களை மாணவர் புகழேந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   அப்துல் கலாம்  நினைவு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவ மாணவியர் முத்தையன், செயசிரீ, பாலமுருகன், கிசோர்குமார், அசய் பிரகாசு, காயத்திரி, அரிகரன், பரமேசுவரி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.   ஒன்றாம் வகுப்பு…

தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி

தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல்  ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.    நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி  ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின்…

தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.   நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11  அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன்  முதலிடத்தையும், அதே  வகுப்பு மாணவர் சஞ்சீவு  இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6  ஆம்…

கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!

கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்! அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்! முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்! வராததை வரவழைத்த வெற்றி மனிதர்! கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு  …

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!   தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுதல் நிகழ்ச்சி   நடைபெற்றது.   நிகழ்வில் மாணவர் விசய் வரவேற்றார். தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  தேவகோட்டை சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்று  பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்திரி, உமாமகேசுவரி, தனலெட்சுமி ஆகியோருக்கும், அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்….

மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் காமராசர் நினைவு கல்வி வளர்ச்சி நாள் விழா:  நகர்மன்ற தலைவர்  பங்கேற்பு   தேவகோட்டை : தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.  விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், காமராசர் எத்தனையோ தலைமுறை…

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ  அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி  ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ  அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை  ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:   நினைவாற்றல் பயிலரங்கம் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி,    நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும்…

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா    தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.    விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து…