மனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது இலங்கை!

மனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது இலங்கை உலகப் பொதுப்பொறுத்தலவை(உலகப்பொது மன்னிப்புக் கழகம்) குற்றச் சாட்டு!   இலங்கையில் புதிய அரசு கடந்த ஆண்டு பதவியேற்றபொழுது கொடுத்திருந்த மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக உலகப் பொதுப்பொறுத்தலவை  குற்றம் சாட்டியுள்ளது.   உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்த ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு இலங்கை மீது கடுமையான கருத்துகளை உலகப் பொதுப்பொறுத்தலவை முன்வைத்துள்ளது.   “இலங்கையில் கடந்த ஆண்டு சனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசு அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு…

காவல்துறையில் முதல் திருநங்கை சார் ஆய்வாளர்

இந்தியக் காவல்துறையின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி!   இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையில் சார்ஆய்வாளராகத் திருநங்கை ஒருவர் சேர்ந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி என்பவரே அவர். ஆனால், எளிதில் இந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. ஆதலின் காவல்துறையையோ அரசையோ பாராட்ட ஒன்றுமில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாராட்டிற்குரியவர்கள்.   திருநங்கை பிரித்திகா யாசினி சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முதலில் காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தபொழுது மூன்றாம் பால் என மறுக்கப்பட்டார். விண்ணப்பத்தை ஏற்பது…

சமூக ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! – நாமக்கல் ஆட்சியர்

குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு   நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:   குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது.   இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும்…

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்   தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம்  பிப்பிரவரி 15  முதல் 29–ஆம் நாள் வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் பெயர்களையும் இறந்தவர்கள் பெயர்களையும் நீக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.  …

புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!  இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.   உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…

ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி

வல்லிசையின் எளிய பறவை   கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட…

சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!   இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப்  பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை.  தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை.   தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான…

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி   பாரத நாட்டிலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை.   இவற்றில் தலைசிறந்த உயர்ந்த கலையாக விளங்குவது பரதநாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ, முகமன் உரை என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர் கூறும் கருத்தையே கூறுகிறேன். “இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலைசிறந்தது) பரத நாட்டியம்” என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஓர்…

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் – மு. இராமநாதன் உரை

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள்  தமிழ்க் கல்வி அறிவுரைஞர் மு. இராமநாதன் உரை   ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன்.  நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு…

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு     பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! [No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016] மொத்தக் காலியிடங்கள்: 21 பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer) காலியிடங்கள்: 07 ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039 வயது வரம்பு: 55-க்குள்…

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை   வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.   இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:   கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.   பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து…

சிங்களஇலங்கை சென்றடைந்தன இந்தியப் போர்க் கப்பல்கள்

  தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக் கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.   இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது.   இது குறித்து நடுவணரசு வெளியிட்ட…