தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1 / 2 இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையும் (1987) அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய வல்லரசு தமிழீழத்தின் மீது நடத்திய படையெடுப்பும் இந்தியப் படை நடத்திய வன்கொடுமைகளும் தமிழர்கள் மறக்கக் கூடாத வரலாற்று உண்மைகள். ஆனால் இப்போது எழுந்துள்ள புதிய சூழலில் இந்த உண்மைகளை மறப்பதுதான் சரி என்று சிலர் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உண்மைகளை மறைக்கவும் அழிக்கவும் கூட…

தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்!” இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு குறித்து இப்படி மொழிந்திருப்பவர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் திருவாளர் செய்சங்கர். இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்க இந்தியா எல்லா உதவியும் செய்யும் என்பதைத்தான் செய்சங்கர் இப்படிச் சொன்னார். இது ஒரு புறம் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் மோதியரசு அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்று தமிழ்நாடு பாசக தலைவர்…

தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்! தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம். இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14

(தோழர் தியாகு எழுதுகிறார் 238 : உழவர் போராட்டம் வெல்க! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14 என் பெயர் இமா (உ)லூரம்பம் நிகாம்பி. அகவை 72. நான் மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் போரில் மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மீரா பைபி பெண்களை ஒரு கருவியாகக் கையாண்டு வருவது வெட்கக் கேடானது. மீரா பைபி குழுவை நிறுவிய பெண்களில் ஒருத்தி என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன். 2004ஆம் ஆண்டு மணிப்பூரில் அசாம் படைப் பிரிவினரின் காவலில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 238 : நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க! (போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்) நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே! 1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு! 2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு! 3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு! 4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு! இந்திய அரசே! 1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை…

தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12

(தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11 தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)  கதை (12) என் பெயர் நான்சி தௌத்தாங்கு. அகவை 34. குக்கி இனப்பெண். நால்வரடங்கிய எங்கள் குடும்பம் வன்முறை வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்து காங்குபோக்குபியில் ஒரு துயர்தணிப்பு முகாமில் தஞ்சடைந்துள்ளது. மணிப்பூர் மாநிலமெங்கும் இது போன்ற பல ஏதிலியர் முகாம்கள் இருப்பதாக அறிகிறோம். இம்பாலிலிருந்து தப்பி இந்த முகாமுக்கு வரும் போது எங்கள் உடைமைகளில் மிகச் சிலவற்றை மட்டுமே எடுத்து வர முடிந்தது. நானும் என் கணவரும் வாழும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11

(தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) கதை (11) நாட்டைக் காத்தேன்! கட்டிய மனைவியைக் காக்க முடியாதவன் ஆனேன்! இந்த என் சொற்களை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்திய இராணுவத்தில் அசாம் படைப் பிரிவில் சுபேதாராகப் பணியாற்றினேன். கார்கில் போரில் நாட்டுக்காகப் போர் புரிந்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையிலும் இடம் பெற்றேன். மே 4ஆம் நாள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பாலியலாக மானபங்கம் செய்யப்பட்ட இரு…

தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10

(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 10 என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன். என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்….

தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9

(தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 8 என் பெயர் (உ)ரோசி கிப்புகென். குக்கி இனம். அகவை 70. என் மகள் மேரி மெய்த்தி இனத்தவரான சேக்கப்பு சிங்கு என்பவரை மணந்து கொண்டாள். மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்குமான இன மோதலின் மையப் புள்ளியாக விளங்கிய சூரசந்த்துபூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறேன். குடும்பத்தில் மற்றவர்கள் உயிருக்கஞ்சி வெளியேறிப் போய் முகாம்களில் இருக்கின்றனர். யார் எங்கே…

தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை (5) என் பெயர் தியன்ன வைப்பே சௌண்டாக்கு. மணிப்பூர் மாநிலம் பெய்டாச்சிங்கு சிற்றூரில் கிறித்துவ சமயக் குரு. மே 7ஆம் நாள் பெரிய வெறிக்கும்பல் ஒன்று எங்கள் ஊரைத் தாக்கியது. மறுநாள் இரு குழந்தைகளின் தாயான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடக்கக் கண்டேன். உடலில் ஆடையில்லை. இம்பாலில் உள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – 3 காதை 3 நான் குக்கி இனப் பெண். பெயர் வேண்டா. அகவை 29. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இனி அங்கு திரும்பிச் சென்று படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன நடந்தது? சொல்கிறேன். மே 3 இரவு, விடிந்தால் 4 – இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) இனிய அன்பர்களே! காதை (2) நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். அகவை 21. சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவன். முகநூலில் இடுகை இடுவேன். பிடித்தமான பிறர் இடுகைகைகளைப் பகிர்வேன். ஏப்பிரல் 27க்குப் பின் சூரசந்த்பூர் மாவட்டமே பதறியது. குக்கி-சோ குழுக்கள் முதலமைச்சர் பிரேன் சிங்கை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தன. அவர் தொடங்கி வைப்பதாக இருந்த உடற்பயிற்சிக் கூடம்…