நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல

நூலாய்வு:சமற்கிருதம் செம்மொழியல்ல வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.–…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5- ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5 15. அகழ்வாய்வாளர்கள் நிறைவாகப் பதினைந்தாவதாக அகழ்வாய்வாளர்கள் குறித்த கட்டுரையை அளித்துள்ளார். “ஓர் இனத்தின் தொன்மைபற்றியும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பற்றியும் பேசுவதும் எழுதுவதும் தேவையா? அவ்வாறு செய்வது பிற இனங்களுக்கு அதன்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வளர வழி செய்வதாகாதா? பழம் சமுதாய, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றைக் கிளறி உண்மை யறிய முயல்வதால் ஏதேனும் நன்மை உண்டா?” எனத் தொன்மை வரலாற்றுச் சிறப்பு…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்- ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது. “தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர்….

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 5. விபுலானந்த அடிகளார் ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 3. அறிஞர் பரிதிமாற்கலைஞர் பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் முடியரசன் ஆகியோர் பாடலடிகளுடன் அறிஞர் பரிதிமாற்கலைஞர் குறித்த கட்டுரையைத் தொடங்கியுள்ளார். இலக்கிய இலக்கண நாடக அறிஞரான பரிதிமாற்கலைஞர் தமிழே உயர்தனிச் செம்மொழியென்று நாளும் முழங்கியதோடு அமையாமல் அதற்குத் துறைதோறும் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தொடங்கி வைத்தார் என்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர். ஆசிரியர் மேற்கோளாகக் காட்டும் பரிதிமாற்கலைஞரின் வரிகள், அவரைத் தமிழாய்ந்த நற்றமிழறிஞராக நமக்குக்…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 3/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு 1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது. வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடைகிழக்கே…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 2/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும்…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 1/3 – புதேரி தானப்பன்

“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது. இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூல் திறனாய்வுக் கட்டுரை 4/4 13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6:                இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்: 13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார். [பக்.27]. 13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும்  உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும்  உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும்…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 3/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூலாய்வு  3/4 8.0.0.0.ஆய்வுப் போக்கு:             ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது. 8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை               எண் வழங்கல், 8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி               உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 2/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 1/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு  2/4 4.3.0.0.கன்பூசியசின் (இ)லூன்யூவும் திருவள்ளுவரது திருக்குறளும்: 4.3.1.0. கன்பூசியசின் (இ)லூன்–யூ:             சீனாவின் மறை நூலகிய (இ)லூன் யூ, உரை நடையில் அமைந்த நூல். இதில் 20 இயல்கள், 499 முதுமொழிகள் உள்ளன.             இவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை; 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை; 43 முதுமொழிகள் பிறர் உரைத்தவை.    4.3.2.0.திருவள்ளுவரது திருக்குறள்:    [பரிமேலழகர் வைப்பு முறை]              3…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு – வெ.அரங்கராசன்

முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு 1/4 1.0.0.0.நுழைவாயில்: 1-8-1973 முதல் 30-6-2008 வரை [34 ஆண்டுகள், 10 திங்கள்கள் 29 நாள்கள்–மொத்தம் 12477 நாள்கள்] சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் இருக்கையில், போற்றுதலுக்கு உரிய பெரும் பணி ஆற்றியவர் திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள். அப்போது “ஆய்வே வாழ்வு; வாழ்வே ஆய்வு” என்னும்  பே ராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி அவர்களின் ஆய்வியல் கோட் பாட்டை அகத்தில் ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல்  சாய்வும் ஓய்வும் இன்றித்…