தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 305- 308

(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 305-308 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 9

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 8 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு. அறை யிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ” என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 302-304

(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 302-304 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 302. Atoms – உயிரணு பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம். நூல்   :           வியாசப்பிரகாசிகை (1910), பக்.97. பதிப்பாளர்            :           பி. எசு. அப்புசாமி (ஐயர்) (உரிமையாளர்    :          …

உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!        – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  62

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 22 தொடர்ச்சி “நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 295 – 301

(தமிழ்ச்சொல்லாக்கம்: 289-294 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 295-301 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 295. சாமானியம்  —        பொதுமை 296. விசேடம்         —        சிறப்பு 297. இரசம்  —        சுவை 298. பரிமாணம்    —        அளவு 299. பேதம்  —        வேற்றுமை 300. பிரயத்தனம் —        முயற்சி 301. சத்தம்  –           ஓசை நூல்   :           தருக்க கெளமுதி (செளமிய ௵ (1910) நூலாசிரியர்         :           தஞ்சை மாநகரம் வெ. குப்புசுவாமி இராசு (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள். “என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.” “ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க” “எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?” “உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.” “உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 289-294

(தமிழ்ச்சொல்லாக்கம்: 281-288 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 289-294 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 289 – 293. உடலசைவுகள் : 5 289. உத்தானிதம் —        மல்லாத்தல் 290. திரியக்கு        —        குறுக்கு அல்லது ஒருகணித்தல் 291. ஆசிதகம்       —        உட்காத்தல் 292. (இசு)திதம்       —        நிற்றல் 293. ஆன்மிதம்      —        குனிதல் நூல் : கொக்தோகம் (1910) பக்கம் : 171 ★ 294. மகாவித்துவான் – பெரும்புலவர் மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் இஃது சென்னை பிரசிடென்சி காலேசில் தமிழ்ப்புலமை…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 தொடர்ச்சி அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி. “நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 281- 288

(தமிழ்ச்சொல்லாக்கம்: 274-280 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 281-288 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 281- 288. தழுவுதல் 281. லதாவேட்டிதாலிங்கம்    —        கொடிபோலக் சுற்றித் தழுவுதல் 282. விருட்சாதிரூடாலிங்கனம்           —        மரத்தைப் போலேறித் தழுவுதல் 283. திலதண்டுலாலிங்கனம்   —        எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல் 284. சீர நீராலிங்கனம் —        பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல் 285. ஊருப்பிரகூடாலிங்கனம் —        தொடையால் நெருக்கித் தழுவுதல் 286. சகனோபசிலேசாலிங்கனம்         —        குறிகள் சேரத் தழுவுதல் 287. (இசு)தனாலிங்கணம்       —        கொங்கையழுந்தத் தழுவுதல் 288. (இ)லாலாடிகாலிங்கணம்…