பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க!

பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு   புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில்   மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரு விழா!

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை அருகில்   வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது….

குற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்

‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது?’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா?…

ஆலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…

உழத்தி – பாவேந்தர் பாரதிதாசன்

களை யெடுக்கின்றாள்-அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ களையெடுக்கின்றாள்! வளையல்தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களை யெடுக்கின்றாள்! கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? -அந்தக் கவிதை ஓவியம் எனை விரும்புமா? அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம் அருவிநீரில் எப்போது முழுகலாம்?- களை செந்நெல் காப்பது பொதுப்பணி செய்யல்!-ஆம். என்ற நினைவினால் என்னருந் தையல், மின்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை

ஓவியக்காரன் – பாவேந்தர் பாரதிதாசன்

ஓவியம் வரைந்தான்-அவன் தன் உளத்தினை வரைந்தான்! ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே ஓவியம் வரைந்தான்! கூவும் குயில்தனைக் கூவா திருத்திக் கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித் தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே ஓவியம் வரைந்தான்! காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான் கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான் ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான் இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான் கோதை…

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாவேந்தர் பாரதிதாசன்

மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன் துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன் எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன் தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள் கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு…

குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்

காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தக தக வென் றாடினாள் போடப் போடப் புதுப் புதுக்கை புதுப் புதுக்கண் காட்டினாள் ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள் தேடத்தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே!

பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன்

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்த முகத் தாமரையாள் புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து….. தேவையடி தாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன் பூவை “என்பேர் பூவை” என்றாள்! ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து…. காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ…

கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்

கசங்கு சீவடி பரம்பு சொற்றடி கைவேளை முடித் திடலாம்-நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயபைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும்தேனும் பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடைமுறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போலே-இனி மூடுதட்டும் குழந்தை மூச்சிலும் முடிப்பதுதான் வேலை காடுவெட்டவும் உதவி யில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண்ணாட்டி சோடியாக நா மிருவர் கூடி உழைக்கும்போது-நம் ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை உரைத்திட முடியாது பாடி…